Recent Posts

உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

Xiaomi MI
சீனாவைச் சேர்ந்த மொபைல் நிறுவனமான சியோமி ஒரு புதிய ஸ்மார்ட்போனை சமீபத்தில் களமிறக்க இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு மி-டூ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இந்த போன் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் எம்ஐயுஐ இயங்கு தளத்தில் இயங்க இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு போன்களான எல்ஜி ஆப்டிமஸ் 4எக்ஸ் எச்டி, எச்டிசி ஒன் எக்ஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் III போன்றவற்றின் செய்திறனை வீழ்த்திவிடும் என்று சியோமி கூறுகிறது.
ஏனெனில் அந்த அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இதன் 4.3 ஐபிஎஸ் டிஸ்ப்ளே மிகவும் துல்லியமாக இருக்கும். இதன் 8எம்பி பின்பக்க கேமரா 1080பி வீடியோ பதிவை மிக அருமையாக செய்து முடிக்கும். அதுபோல் இதன் 2எம்பி முகப்புக் கேமரா மூலம் சூப்பரான வீடியோ உரையாடலை நடத்தலாம்.
இந்த ஸ்மார்ட்போன் மிகவும் சக்தி வாய்ந்த 1.5 ஜிஹெர்ட்ஸ் சினாப்ட்ராகன் எபிகியு80064 எஸ் ப்ரோ சிப்செட் (க்வாட்கோர் க்ரைட் சிபியு + அட்ரினோ 320 ஜிபியு) கொண்டிருப்பதால் தாறுமாறான வேகத்தில் இயங்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை உலகின் மிக வேகமான ஆன்ட்ராய்டு போன் என்று அழைக்கலாம்.
மேலும் இந்த போன் 2ஜிபி டிடிஆர்2 ரேம், 16ஜிபி சேமிப்பு, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி, எச்டிஎம்ஐ அவுட் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது.
வரும் அக்டோபர் மாதம் சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்தியாவிற்கு வருமா என்று தெரியவில்லை. இந்த போன் ரூ.15,000க்கு விற்கப்பட இருக்கிறது.

பிடித்து போடு போடு.

களவும் கற்று மற என்பது நம் ஊர் வாக்கு.திருடர்களின் தந்திரங்களை அறியாத போலீசாரால் என்ன பயன்.  இன்றைக்கு இந்த ஹேக்கிங் போக்கே மாறியிருக்கின்றது. திருட்டுத்தனமாய் இல்லாமல் நல்ல முறையில் ஹேக்கிங் செய்பவர்களை ஒயிட் ஹேட்ஸ் (White Hats) என்பார்கள்.இத்தகையோருக்கு இன்றைக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்ப்பு. பேப்பர் பேப்பராக வேலை தேட வேண்டியதில்லை, பயோடேட்டாவெல்லாமல் எழுத வேண்டியதில்லை, பேஸ் டு பேஸ் இண்டர்வியூவெல்லாம் செல்லாமல் கூகிள்,ஆப்பிள் போன்ற பிரதான கம்பெனிகள் வேலை கொடுக்கின்றன ஹேக்கர்களுக்கு. ஆஸ்திரியாவை சேர்ந்த வலைப்பதிவர் பிளோரியன்.புதிதாக வந்துள்ள கூகிள் ப்ளசின் இண்டு இடுக்குகளில் நுழைந்து மோப்பமிட்டு கூகிள் ரகசியமாக டெவலப் செய்து கொண்டிருந்த பல புது கூகிள் பிளசின் வசதிகளை முன்கூட்டியே உலகுக்கு தனது வலைப்பதிவுகள் வழி அறிவித்துவிட கூகிளுக்கு பொத்துக்கொண்டு வந்தது டென்சனும் ஆச்சரியமும். கூகிளுக்கு தெரிந்த ஒரே ஈசி சொலூசன். இத்தனை புத்திசாலியை விட்டு வைக்கக்கூடாதுவென தன் நிறுவனத்தில் அவரை சேர்த்துக்கொண்டது.

இதே மாதிரி இன்னொரு கதை.பத்தொன்பதே வயதான
நிக்கோலஸ் என்பவர் ஆப்பிள் ஐபோன்களை ஜெயில் பிரேக் பண்ணுவதில் படு கில்லாடி. www.jailbreakme.com-னு இதற்கென தனியாக ஒரு வலைத்தளமே வைத்திருக்கின்றார். பார்த்தது ஆப்பிள். தொல்லை தாங்க முடியாமல் அவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் அனுப்பி இருக்கின்றது. இப்படி இந்த மாதிரியான கதைகள் தொடர்கின்றது.
 

ஹேக்கிங்கில் ஆர்வமா,இன்னும் வாய்ப்புகள் இருக்கின்றன. பேஸ்புக் இணையதளம் ”Security Bug Bounty” எனும் திட்டத்தை அறிவித்திருக்கின்றது. அதன் படி பேஸ்புக் வெப்சைட்டின் புரோகிராம் கோடில் நீங்கள் ஏதாவது பாதுகாப்பு குறைபாடுகளை கண்டுபிடித்து அறிவித்தால் $500 முதல் இன்னும் அதிகமான டாலர்கள் வரை சன்மானம் நீங்கள் கொடுக்கும் தகவலை பொறுத்து கொடுப்பதாக அறிவித்திருக்கின்றார்கள்.இதுவரை இந்த மாதிரி பக் ரிப்போர்ட் கொடுத்துள்ளவர்கள் லிஸ்டில் பல இந்திய பெயர்கள் இருக்கும் என நினைத்து ஓடிப்போய் பார்த்தால் இரண்டே இந்திய பெயர்கள் தான் தெரிந்தது.”நம் ஊர் காரர்களுக்கு சம்பளத்துக்கு தான் புரோகிராம் பண்ணத் தெரியும், ஹேக்கிங்குக்கு சீனர்களைத்தான் பிடிக்கனும்”. அதனால் என்ன பேஸ்புக்குக்கு போட்டியாக வந்து சக்கை போடு போடும் கூகிள் பிளஸ் புராஜெக்டின் லீடரே ஒரு இந்தியர் தான் என நாம் பெருமைபட்டுக்கொள்ளலாம். பெயர் Vic Gundotra.

தமிழில் எழுத